கரோனா: நாட்டில் 97.35 லட்சத்தைக் கடந்துள்ளது
நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 97,35,850 ஆக அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3.89 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 97,35,850 ஆக அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3.89 சதவீதமாக உள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 32,080 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 97,35,850 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல், கரோனா தொற்றுக்கு மேலும் 402 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த உயிரிழப்பு 1,41,360-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் மேலும் 36,635 பேர் மீண்டுள்ளனர். இதனால்தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 92,15,581 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது, மொத்த பாதிப்பில் 94.66 சதவீதமாகும்.
நாட்டில் இப்போது 3,78,909 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்த பாதிப்பில் இது 3.89 சதவீதமாகும். புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கையும், சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பா் 8-ஆம் தேதி வரை 14,98,36,767 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 10,22,712 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.