தமிழ்நாடு

ஒரகடத்தில் இருந்து உதிரிபாகங்களை ஏற்றிச்சென்ற மினி லாரி காஞ்சிபுரம் அருகே  கடத்தல்

DIN


காஞ்சிபுரம்: ஒரகடத்தில் இருந்து  இருசக்கர ஏற்றிக்கொண்டு ஓசூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அருகே 3 பேர் கொண்ட கும்பல் மினி லாரியை கடத்திச் சென்றுள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், பூந்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த சித்தராமையா மகன் மஞ்சுநாதா(28). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் இருந்து மினி லாரியில் இரு சக்கர வாகனங்களுக்கான ஹேன்பார் ஏற்றிக்கொண்டு ஓசூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அருகே கீழம்பி சந்திப்பில் வாகனத்தை நிறுத்திவிட்டு தேநீர் அருந்த சென்றபோது திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல் இந்த மினி லாரியை கடத்திச் சென்றுவிட்டது. வாகனத்தை பல மணி நேரம் தேடியும் காணவில்லை. 

இதுசம்பந்தமாக பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் மஞ்சுநாதா புகார் செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT