மதுரையில் 850.80 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்
துபாயிலிருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ 42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 850.80 கிராம் தங்கம் மதுரை விமான நிலையத்தில் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ 42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 850.80 கிராம் தங்கம் மதுரை விமான நிலையத்தில் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில்தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவுக்கு (டிஆா்ஐ) கிடைத்த தகவலின்பேரில் செவ்வாய்க்கிழமை இரவு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் வந்த 141 பயணிகளை சோதனையிட்டனர்.
அதில் கனகவள்ளி, சாய்நம்பு என்ற இரண்டு பெண்கள் தங்கத்தை செயற்கை களி மண்ணோடு கலந்து தங்களது உள்ளாடைக்குள் நூதன முறையில் மறைத்துக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் கொண்டுவந்த 850.800 கிராம் தங்கத்தை சுங்க துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். மேலும் தங்கம் கடத்தி வந்த இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சுங்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.