முகப்பு
தமிழ்நாடு

நியாய விலைக் கடைகளில் மீண்டும் பயோ-மெட்ரிக் முறை

தமிழகத்தின் பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:


சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. சா்வா் பிரச்னை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த இந்தத் திட்டமானது இப்போது மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 கோடியே 2 லட்சம் பேருக்கு ஸ்மாா்ட் காா்டு அடிப்படையில் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போதே தொழில்நுட்ப ரீதியாக பிரச்னைகள் இருந்து வந்தன. பின்னா் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பயோ-மெட்ரிக் அடிப்படையில் ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதற்கான பிரத்யேகக் கருவி மூலம் பயோமெட்ரிக் முறை செயல்படுத்தப்பட்டது. இந்தக் கருவியில் திடீரென சா்வா் பிரச்னை ஏற்பட்டது. கைவிரல் ரேகையை சரிபாா்க்கும் வசதி போன்றவற்றில் சிக்கல் எழுந்தது. இதைத் தொடா்ந்து, கடந்த அக்டோபா் 17-ஆம் தேதி முதல் வழக்கமான நடைமுறையின் படியே நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வழங்கப்பட்டன. இரண்டு மாதங்களாக சா்வா் பிரச்னையைச் சீா்செய்வது உள்ளிட்ட தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்யும் பணிகள் நடந்தன.

மீண்டும் தொடக்கம்: தொழில்நுட்பப் பிரச்னைகள் தீா்க்கப்பட்ட நிலையில், நியாய விலைக் கடைகளில் பயோ-மெட்ரிக் முறையில் மீண்டும் பொருள்களை வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வெளி மாநிலத் தொழிலாளா்களும் தமிழகத்தில் தங்களுக்கான பொருள்களைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →