தமிழகத்தில் புதிதாக 1,134 பேருக்கு கரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,134 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,134 பேருக்கு இன்று (சனிக்கிழமை) கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் புதிதாக 341 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 60-வது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரை விட குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Advertisement
தமிழகத்தில் கரோனா தொற்றால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் புதிதாக 1,134 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,04,650-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 9,781 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 1,170 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 7,82,915-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 12 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,954-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 341 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,21,587-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 3,037 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2,14,612-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 3 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,938-ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக 115 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.