தமிழ்நாடு

புதுகை மீனவர்கள் 4 போ் இலங்கை கடற்படையினரால் கைது

DIN

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்ட் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ், பாண்டு, மோகன் ஆகிய 4 பேரும் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இவர்களை, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்தனர்.

பின்னா், 4 பேரையும் காரைநகரிலுள்ள கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட அவா்கள் 4 பேரையும் அங்கு தங்க வைத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT