தமிழ்நாடு

சென்னையில் நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

DIN


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை (டிச.25) சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாளை சென்னை புறநகர் ரயில்சேவை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களிலிருந்து நாளை இயக்கப்படும் புறநகர் ரயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அலுவலகம் செல்வோர் மற்றும் பெண்களுக்கு மட்டும் சென்னை புறநகர் ரயிலில் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்துத் தரப்பு மக்களும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இத்தகைய சூழலில், நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அதிக மக்கள் பயணிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT