விபத்தில் உயிரிழந்த ஜெயபால். 
தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டை அருகே ரயில் மோதி கேங்மேன் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் காந்திநகர் பகுதியில், சனிக்கிழமை அதிகாலை தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர் ரயில் மோதி உயிரிழந்தார்.

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் காந்திநகர் பகுதியில், சனிக்கிழமை அதிகாலை தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர் ரயில் மோதி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள சொர்ணாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால்( 49). இவர் ரயில் தண்டவாளத்தை பராமரிக்கும் கேங்மேனாக வேலை பார்த்து வருகிறார்.

வெள்ளிக்கிழமை வழக்கம்போல் விழுப்புரம்- விருத்தாச்சலம் ரயில்வே மார்க்கத்தில் இரவு பணி மேற்கொண்ட ஜெயபால், சனிக்கிழமை அதிகாலை, விழுப்புரம்-விருத்தாசலம் இடையே உளுந்தூர்பேட்டையை அடுத்த பாதூர் காந்திநகர் பகுதியில், ரயில்வே தண்டவாளத்தின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டபோது ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்து கிடந்தார்.

 சம்பவ இடத்தில் விசாரணை நடத்தும் ரயில்வே போலீசார்.

விசாரித்தபோது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலும், சென்னை நோக்கி சென்ற செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒரே நேரத்தில், பாதூர் பகுதியில் கடந்துசென்றபோது, எதிர்பாராத விதமாக ஜெயபால் மீது ரயில் மோதி உள்ளது. இதில் உடல் நசுங்கிய நிலையில் அவர் உயிரிழந்தார். 

இதுபற்றி தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் விரைந்து வந்து, ஜெயபாலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயிலில் குடமுழுக்கு

விவசாயிகள், வணிகா்களுக்கான விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

நெற்குப்பை நூலகத்துக்கு மாநில அளவிலான விருது

தெய்விகம் பெண்மை... சாஹிதி தாசரி!

ஹாங்காங் தீ விபத்து: 75 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! 280 பேர் மாயம்!

SCROLL FOR NEXT