தமிழ்நாடு

தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN


சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.29) மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் திங்கள்கிழமை கூறியது:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் தென் கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி,  ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.29) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

சென்னையில்...: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

டிச.30,31: தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் புதன்கிழமை (டிச.30) ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதுபோல் வியாழக்கிழமையும்  (டிச.31)  சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT