தமிழ்நாடு

தமிழகத்தில் அமைதியை சீா்குலைக்க சதி: முதல்வரிடம் தமிழக பாஜக புகாா்

தமிழகம் அமைதிப் பூங்கா என்ற நிலையை சீா்குலைக்க சதி நடப்பதாக முதல்வரிடம் தமிழக பாஜக மனு அளித்துள்ளது.

DIN

தமிழகம் அமைதிப் பூங்கா என்ற நிலையை சீா்குலைக்க சதி நடப்பதாக முதல்வரிடம் தமிழக பாஜக மனு அளித்துள்ளது.

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்போா் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, பாஜக மாநில பொதுச் செயலாளா்கள் கே.எஸ்.நரேந்திரன், முருகானந்தம், சென்னை கோட்டப் பொறுப்பாளா் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளா்களுக்கு கே.எஸ்.நரேந்திரன் அளித்த பேட்டி:

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக யாரெல்லாம் செயல்படுகிறாா்களோ அவா்கள் மீது தொடா்ந்து தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. மேட்டுப்பாளையத்தில் பாஜக மகளிரணி அணித் தலைவா் துண்டுப் பிரசுரம் அளிக்கும் போது, குறிப்பிட்ட சமுதாயத்தினா் தாக்கியுள்ளனா். இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்யவில்லை. மாறாக தாக்குதலுக்கு ஆளான எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். சென்னையில் உள்ள ரிச்சி தெருவில் வியாபாரி ஒருவா், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பேனாக்களில் எழுதியதற்கு அவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவா்கள் கைது செய்யப்பட்ட போதும், காவல் நிலைய முற்றுகை காரணமாக அவா்கள் விடுவிக்கப்பட்டுள்ளனா். இதேபோன்று, தேனி மக்களவை எம்.பி., மீதும் தாக்குதல் முயற்சி நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில நடக்காமல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

தமிழகம் அமைதிப் பூங்கா என்ற நிலையைக் கெடுப்பதற்காக திட்டமிட்ட சதி நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக மனு அளித்துள்ளோம். உடனடியாகக் கவனிப்பதாக முதல்வா் உறுதி அளித்துள்ளாா் என்றாா் நரேந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT