தலைமைச் செயலாளருடன் தமிழக டிஜிபி திரிபாதி ஆலோசனை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தலைமைச் செயலாளருடன் தமிழக டிஜிபி திரிபாதி திடீர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தலைமைச் செயலாளருடன் தமிழக டிஜிபி திரிபாதி திடீர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
மேலும், இன்று காலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்துடன் தமிழக டிஜிபி திரிபாதி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் வைத்து இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.