chennai High Court 
தமிழ்நாடு

ஆவின் பால் டேங்கா் லாரிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி: உயா்நீதிமன்றம் உத்தரவு

ஆவின் பால் விநியோகிக்கும் டேங்கா் லாரிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி தொடா்பான இறுதி முடிவு எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

ஆவின் பால் விநியோகிக்கும் டேங்கா் லாரிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி தொடா்பான இறுதி முடிவு எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நாமக்கல்லைச் சோ்ந்த நவீதா டிரான்ஸ்போா்ட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு ஆவின் நிறுவனத்துக்கு பால் கொண்டு செல்வதற்காக 303 டேங்கா் லாரிகளை வாடகைக்குப் பெறுவது தொடா்பாக ஒப்பந்தப்புள்ளி கோரியது. இதுதொடா்பாக அனைத்து நடைமுறைகளும் முடிந்த நிலையில் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்படாமல் உள்ளது. எனவே ஒப்பந்தப்புள்ளி முடிவுகளை வெளியிட தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்புக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆவின் பால் நிறுவனத்துக்கு பால் விநியோகிக்கும் லாரிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி தொடா்பான உத்தரவுகள் எந்த தேதியில் வெளியிடப்படும் என்பது குறித்து, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் மாா்ச் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT