தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த தம்பதி மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு

DIN

திண்டுக்கல் அடுத்துள்ள யாகப்பன் பட்டியைச் சேர்ந்த கிறிஸ்துராஜா (32), மனைவி அந்தோணி ஜெனி மேரி தம்பதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனர். அப்போது நுழைவு வாயிலில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இருவர் மீதும் தண்ணீரை ஊற்றி பாதுகாத்தனர். இதுதொடர்பாக தொடர்பாக கிறிஸ்துராஜா கூறுகையில், ஊர் பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி புனித சந்தியாகப்பர் ஆலயம் ரூ.4 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. 

இதற்கான அனைத்து பணிகளையும் நாங்கள் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது எங்களை ஊரைவிட்டு விலக்கி வைப்பதாகவும் கோயிலுக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது என்று ஊர் முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

தீக்குளிக்க முயன்ற இருவரையும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT