தமிழ்நாடு

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு

DIN


சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி விவகாரம் தொடர்பாக ஜனவரி 24-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து, திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 24/01/2020 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில், "அனைத்துக் கட்சிக் கூட்டம்" நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேசமயம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இவ்விவகாரங்கள் தொடர்பாக திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT