தமிழ்நாடு

திருச்செந்தூரில் தேசிய கொடி ஏற்றினார் கனிமொழி எம்.பி.

குடியரசு தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்பு மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். 

DIN

குடியரசு தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்பு மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். 

குடியரசு தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தி.மு.க. மாநில துணை அமைப்பாளர்கள் மருத்துவர் செ.வெற்றிவேல், எஸ்.ஆர்.எஸ். உமரிசங்கர், உடன்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் டி.பி.பாலசிங், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பை.மு.ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க ஒன்றியச் செயலர்கள் செங்குழி ரமேஷ், நவீன்குமார், ரவி, நகரச் செயலர்கள் வாள் சுடலை, ஜாண்பாஸ்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், மாவட்ட அமைப்பாளர்கள் ராஜபாண்டி, சுப்பிரமணியன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஸ்ரீதர் ரொட்ரிகோ, இசக்கிமுத்து, சுதாகர், பொன்முருகேசன், லதா கலைச்செல்வன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் கோமதிநாயகம், ராஜ்மோகன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT