தமிழ்நாடு

முன்கள வீரர்களைக் காப்பதில் அதிமுக அரசின் அலட்சியம் மற்றவர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்துகிறது: ஸ்டாலின்

DIN

முன்கள வீரர்களைக் காப்பதில் அதிமுக அரசின் அலட்சியம் மற்றவர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த டாக்டர் சுகுமார், கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'செங்கல்பட்டு அரசு மருத்துவர் சுகுமார் கரோனாவால் உயிரிழந்தார் என அறிந்து வேதனையுற்றேன். ஆழ்ந்த இரங்கல்!

முன்கள வீரர்களைக் காப்பதில் அதிமுக அரசின் அலட்சியம் மற்றவர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தி மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும்! இனியொரு மரணம் நிகழாமல் தடுத்திடுக!' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT