தமிழ்நாடு

செய்யூர் இளம்பெண் தற்கொலை விவகாரம்: தேடப்பட்டு வந்த திமுக நிர்வாகி கைது

DIN

செய்யூர் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திமுக நிர்வாகி தேவேந்திரநாய் போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே கடந்த ஜூன் 24 அன்று சசிகலா என்ற இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திமுக நிர்வாகிகள் தேவேந்திரன், புருஷோத்தமன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தவழக்கில் புருஷோத்தமன் தாமாகவே வந்து காவல்துறையிடம் சரணடைந்தார். தொடர்ந்து தலைமறைவான தேவேந்திரனை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று சென்னை வியாசர்பாடி பகுதியில் வைத்து தேவேந்திரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக, தேவேந்திரன் மற்றும் புருஷோத்தமன் ஆகிய இருவரும் இணைந்துதான் சசிகலாவை தூக்கில் தொங்க விட்டதாக சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதற்கிடையே, தேவேந்திரன் மற்றும் புருஷோத்தமன் ஆகிய இருவரும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT