தமிழ்நாடு

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இளைஞர் மரணம் அடைந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

DIN


மதுரை: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மகேந்திரன் எனபவர் மரணமடைந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மகேந்திரன் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.

வழக்கின் விசாரணை விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் நடந்த கொலை தொடர்பான விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மகேந்திரன், ஜூன் 13-ம் தேதி மரணம் அடைந்தது தொடர்பாக அவரது தாய் வடிவு புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT