பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
சென்னையில் நாளை (ஜூலை 23) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை (ஜூலை 23) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, மேற்கு பல்லாவரம் பகுதி, கிழக்கு பல்லாவரம் பகுதி, கடப்பேரி பகுதி, பட்டாபிராம் பகுதி, மாடம்பாக்கம் பகுதிகளில் நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும்.