தமிழ்நாடு

புதிய உச்சத்தில் தங்கம் விலை: ஒரு சவரன் 38,776-க்கு விற்பனை

DIN

சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து 39 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உலகை உலுக்கி வருகின்றது. இந்நிலையில், இதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை முதலீட்டாளர்கள் எண்ணினா். இதையடுத்து, தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதன்காரணமாக, தங்கத்தின் தேவை உயா்ந்து, விலை நாள்தோறும் உயா்ந்து வந்தது. 

இந்த நிலையில், இன்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.74 உயர்ந்து ரூ.4,847-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.592 உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சமாக 38,776க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கடும் உயர்வை அடைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3.50 உயர்ந்து, ரூ.67.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT