தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 5,864 பேருக்கு கரோனா; ஒரேநாளில் 97 பேர் பலி

DIN

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 5,864 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 2.40 லட்சத்தை நெருங்கியுள்ளது. 

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,864 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பாதிப்பு 2,39,978 ஆக உயர்ந்துள்ளது.

இதில், அதிகபட்சமாக சென்னையில் 1,175 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 98,767 ஆனது.

இன்றைய பாதிப்பில் தமிழகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 5,811 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 53 பேர்.

தமிழகத்தில் மேலும் 97 பேர்(அரசு மருத்துவமனை -65, தனியார் மருத்துவமனை -32) கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 3,838 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று மட்டும் 5,295 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,78,178 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 57,962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 61,202 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 25,97,862 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 58 அரசு ஆய்வகங்கள், 61 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 119 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன. 

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஒருநாள் பாதிப்பு 6 ஆயிரத்தைத் தாண்டி பதிவான நிலையில், இன்று தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்!

மார்க்சிஸ்ட் கம்யூ. எக்ஸ் பக்கம் முடக்கம்!

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

SCROLL FOR NEXT