தமிழ்நாடு

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தனிமைப்படுத்தப்பட்டார்

DIN


நீலகிரி: தில்லியில் இருந்து உதகைக்கு திரும்பிய நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா அவரது முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். 

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து தில்லியிலேயே தங்கியிருந்த ஆ ராசா விமான சேவை தொடங்கப்பட்டதையடுத்து செவ்வாய்க்கிழமை நீலகிரிக்கு திரும்பினார்.

இந்நிலையில் உதகையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்திற்கு வந்த ஆ. ராசாவை சந்தித்த சுகாதாரத்துறை ஊழியர்கள், 7 நாள்களுக்கு அவரை அவர் இருக்கும் இடத்திலேயே தனிமைப்படுத்துவதாக அறிவித்து அதற்கான உத்தரவையும் அவரிடமே வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT