முகப்பு
தமிழ்நாடு

பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள, பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 5 ஜூன், 2020 at 2:16 PM
பகிர்:


சென்னை: ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள, பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, 1.2.2020 முதல் 120 நாள்களுக்கு 7776 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தற்போது தொடர்ந்து தண்ணீர் திறந்து விடுமாறு கொடிவேரி விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து 6.6.2020 முதல் 15.6.2020 முடிய 10 நாட்களில் 7 நாட்கள் மட்டும் பாசனத்திற்கு நீர் விநியோகம் செய்தும், 3 நாட்கள் இடைநிறுத்தம் செய்தும், 241.92 மில்லியன் கனஅடி தண்ணீரை திறந்துவிட உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இதனால், ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி மற்றும் அந்தியூர் வட்டடங்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டுமாய் முதல்வர் பழனிசாமி அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.