தமிழ்நாடு

மக்களின் ஒத்துழைப்பின்றி கரோனா பரவலைத் தடுப்பது சாத்தியமில்லை: முதல்வர் பழனிசாமி

DIN

மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் கரோனா பரவலைத் தடுப்பது சாத்தியமாகாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்குநாள் கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில், மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கரோனா தடுப்பு நடவடிக்கை சாத்தியமாகாது என்று கூறியுள்ள அவர், வெளியில் செல்லும் அவசியம் ஏற்பட்டால் கண்டிப்பக முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று வலியறுத்தியுள்ளார்.

மேலும் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் தமிழகத்தில் தான் அதிகம் என்றும் உலகிலேயே இறப்பு விகிதம் தமிழகத்தில் தான் மிகவும்குறைவு எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT