கள்ளக்குறிச்சி மாவட்டம் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ.,கார்த்திகேயன் மனைவி இளமதி (40), மற்றும் மகள் மகன்யா (8) ஆகிய இருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களுடன் நேரடி தொடர்பிலிருந்த குடும்ப உறுப்பினர்கள் 7 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.