தமிழ்நாடு

சென்னைப் பொதுமுடக்கம்: வங்கிகள் இருநாள்களே செயல்படும்

DIN

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் நிலையில் வங்கிகள் ஜூன் 29, 30 ஆகிய இரு தினங்கள் மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,  சென்னை மற்றும் ஒட்டியுள்ள மாவட்டங்களின் பகுதிகளில் வரும் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி இரவு 12 மணி வரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

இந்த காலகட்டத்தில் வங்கிகள் ஜூன் 29, 30 ஆகிய இரு தினங்கள் மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கிகள் 33 சதவீத பணியாளர்களோடு 29.6.2020 மற்றும் 30.6.2020 ஆகிய நாட்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் அது சம்மந்தப்பட்ட வங்கிப்பணி மற்றும் போக்குவரத்து வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT