சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஊழியர். 
தமிழ்நாடு

சிவகளை அகழாய்வில் மேலும் 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டத்துக்கு உள்பட்ட சிவகளையில் நடைபெற்றுவரும் அகழாய்வில் மேலும் இரண்டு முதுமக்கள் தாழிகள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

DIN


ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டத்துக்கு உள்பட்ட சிவகளையில் நடைபெற்றுவரும் அகழாய்வில் மேலும் இரண்டு முதுமக்கள் தாழிகள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

சிவகளையில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள தொல்லியல் களத்தில் பழங்கால பாறை கிண்ணங்கள், இடைக்கற்கால கருவிகள், இரும்புக் கருவிகளின் கழிவுகள், முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு மண்பாண்ட வகைகள், எடைக் கற்கள், செம்பினால் ஆன பொருள்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், தமிழக தொல்லியல் துறையினர் சிவகளையில் அகழாய்வுப் பணிகளை கடந்த மே 25-ஆம் தேதி தொடங்கினர். கடந்த 5-ஆம் தேதி 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், மேலும் 2 முதுமக்கள் தாழிகளும், உடைந்த நிலையில் 5 முதுமக்கள் தாழிகளும் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: பாஜகவினா் சாலை மறியல்! 12 போ் கைது!

2027-இல் ஜொ்மனியை இந்தியா விஞ்சிவிடும்: சிந்தியா

முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை; சாப்பிட உகந்தவை!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணை

தனுஷ்கோடி வரை நான்கு வழிச் சாலை: ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT