தமிழ்நாடு

ஜயங்கொண்டம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதி இளம் பெண் பலி

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

DIN

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

செந்துறை அடுத்த சிறுகளத்தூர், மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியாண்டி மனைவி சாந்தி(31). இவர், புதன்கிழமை பிற்பகல் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மாயவன் மனைவி பவுனம்மாளை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு, ஜயங்கொண்டம் சென்றார். அங்கு தனது தம்பி திருமணத்துக்கு நகைகளை வாங்கிக் கொண்டு இலையூர் வாரியங்காவல் சாலையில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். 

அப்போது எதிரே வந்த லாரி, அவர்களது வாகனத்தின் மீது மோதியது. இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பலத்த காயமடைந்த பவுனம்மாள் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து ஜயங்கொண்டம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ம.இளையராஜா(30) என்பவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT