தமிழ்நாடு

சீன உணவுகளை தவிர்த்திடுவீர்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள்

சீன உணவுகளைத் தவிர்த்து விடுமாறு பொதுமக்களுக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள் வைத்துள்ளார்.

ANI


புது தில்லி: சீன உணவுகளைத் தவிர்த்து விடுமாறு பொதுமக்களுக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள் வைத்துள்ளார்.

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரா்களுக்கு இடையே திங்கள்கிழமை இரவு திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பழனி உள்பட 20 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதன் விளைவாக, இந்தியாவில் சீன தலைவா்களின் புகைப்படங்கள், அந்நாட்டு தேசிய கொடி எரிக்கப்பட்டு போராட்டங்கள் நடைபெறுகின்றன. மேலும் குறிப்பிட்ட சில இடங்களில் சீன பொருள்கள் சாலையில் வீசி உடைக்கப்பட்டு, எரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் சீன உணவுகளை உணவகங்களில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட வேண்டும். பொதுமக்களும், சீன உணவுகளை உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்வதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் அண்ணன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் பிறந்த மண்! - மதுரை குறித்து Vijay | TVK

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்ட விஜய்!

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை

தமிழக குழந்தைகளுக்குத் தாய்மாமன்! விஜய் பேச்சு

சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி தள்ளுபடியில்!

SCROLL FOR NEXT