திருச்சி மாநகர காவல் துணை ஆணையரின் கார் ஓட்டுநருக்கு கரோனா
திருச்சி மாநகர காவல் துணை ஆணையரின் கார் ஓட்டுநருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர காவல் துணை ஆணையரின் கார் ஓட்டுநருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் துணை ஆணையரின் கார் ஓட்டுநரான காவலர் ஒருவர், கடந்த இரு நாட்களாக சளி, இருமலுடன் இருந்துள்ளார். எனவே, சந்தேகத்தின்பேரில் அவரைக் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
இந்நிலையில், அவருக்குக் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று (ஜூன் 19) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துணை ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட காவலருடன் தொடர்பிலிருந்த நபர்கள் அனைவரையும் கரோனா பரிசோதனைக்கு மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். காவலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம், திருச்சி மாநகர காவல்துறை வட்டாரத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.