சூரிய கிரகணம் நேரத்தில் அசையாமல் நிற்கும் உலக்கை
சூரிய கிரகணம் நேரத்தில் ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மக்கள் உலக்கையை நிற்க வைத்தனர்.
சூரிய கிரகணம் நேரத்தில் ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மக்கள் உலக்கையை நிற்க வைத்தனர்.
முந்தைய காலத்தில் கிரகண நேரத்தை கணக்கிடுவதற்காக கிரகணம் துவங்கும்போது உலக்கையை நிற்க வைப்பார்கள். கிரகணம் துவங்கிய நேரம் முதல் கிரகணம் முடியும் வரையில் உலக்கை கீழே சாயாமல் அப்படியே நிற்கும். கிரகணம் முடிந்த உடன் உலக்கை கீழே சாய்ந்து விடும்.
அதை அடிப்படையாகக் கொண்டு ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணத்தையொட்டி வீடுகளில் பொதுமக்கள் உலக்கையை நிற்க வைத்தனர். அது கீழே சாயாமல் நின்றது.