அமைச்சர் விஜயபாஸ்கர் 
தமிழ்நாடு

கேரளத்துக்குச் செல்வதை தமிழக மக்கள் தவிர்க்கலாம்: விஜயபாஸ்கர் அறிவுரை

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், கேரள மாநிலத்துக்குச் செல்வதை தமிழக மக்கள் தவிர்க்கலாம் என்று தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

DIN


சென்னை: கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், கேரள மாநிலத்துக்குச் செல்வதை தமிழக மக்கள் தவிர்க்கலாம் என்று தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கரோனா தொற்று குறித்து கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், முதியவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதுபோல, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கரோனா பாதித்த நாடுகளுக்கு செல்வது குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா பரவி வரும் கேரளத்துக்கு தமிழக மக்கள் செல்வதைத் தவிர்க்கலாம்.

அதே சமயம், கரோனா தொற்று குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். இதுவரை 1,46,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT