தமிழ்நாடு

கரோனா பாதிப்பா? திருவாரூர் அரசு மருத்துவமனையில் 2 பேர் அனுமதி

DIN

கரோனா வைரஸ் சந்தேகத்தின்பேரில் இன்று ஒரே நாளில் தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேர் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (37). அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 4 நாட்களுக்கு முன் தமிழகம் திரும்பினார். தொடர்ந்து, அவருக்கு சளித்தொல்லை காரணமாக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு கரோனா பாதிப்பு இருக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக மேல் சிகிச்சைக்காக அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதேபோல தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த முருகையன் (45) என்பவர் கடந்த 3 நாட்களுக்கு முன் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊர் திரும்பி  உள்ளார். அவரும் தனக்கு கொரானா வைரஸ் இருக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரோனோ வைரஸ் சந்தேகத்தின்பேரில் இன்று மட்டும் இரண்டு பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT