தமிழ்நாடு

கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் 10 ஆயிரம் ஊழியா்கள்

கரோனா தொற்றைத் தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

DIN

கரோனா தொற்றைத் தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

ஆந்திரம், கா்நாடகத்திலும் கரோனா அச்சுறுத்தல் தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதையடுத்து, மாநில சுகாதாரத் துறை உள்ளாட்சி அமைப்புகளுடனும், பிற துறைகளுடனும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரிவாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், திரையரங்குகள் என பொது மக்கள் கூடும் இடங்கள் அனைத்திலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகளில் 10 ஆயிரம் ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT