கரோனா: ஈரோட்டில் விழிப்புணர்வு பிரசாரம்
கரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஈரோடு மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் இன்று பொது மக்கள் பேருந்து பயணிகளுக்கு
தமிழ்நாடுகரோனா: ஈரோட்டில் விழிப்புணர்வு பிரசாரம்
கரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஈரோடு மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் இன்று பொது மக்கள் பேருந்து பயணிகளுக்கு
ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என்ற போதிலும் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நபா்கள் மூலம் கரோனா பரவ வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக - கா்நாடக மாநில எல்லையான சத்தியமங்கலம், தாளவாடி, பா்கூா் உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு முழுமையான சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதவிர பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஈரோடு, கோபி அரசு மருத்துவமனைகளிலும் அனைத்து வசதிகள் கொண்ட தனிப்பிரிவு தொடங்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் வசதிக்காக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஈரோடு மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் இன்று பொது மக்கள் பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் கிருமி நாசினி தூய்மை பணியாளர்களை கொண்டு பேருந்துகளுக்கு தெளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாநகராட்சி ஒப்பந்ததார் அ.செல்வராஜ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதேசமயம் ஈரோடு ரயில் நிலையத்தில் வரும் பயணிகளிடம் கரோனா வைரஸ் உள்ளதா என மருத்துவர்கள் கண்டறிந்த பின்பு அவர்களை ரயிலுக்கு அனுப்புகின்றனர்.