முகப்பு
தமிழ்நாடு

கரோனா அச்சுறுத்தல்: கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:14 PM
பகிர்:

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸுக்கு இந்தியாவில் மட்டும் இதுவரை 200க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வயைல், கரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை இந்தியன் வங்கியின் பிரதான கிளையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகவசத்தோடு பணியில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள்

கோவை மத்திய ரயில் நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் நடைமேடையில், பயணிகள் அமர்ந்து செல்லும் போது உடனே கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது

கோவை ரயில் நிலையத்தில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள் கை கழுவும் முறை குறித்து வரும் பயணிகளிடம் பணிவிடை விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்

கோவை ரயில் நிலையத்தில் மாவட்ட சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வரும் பயணிகளை தீவிர மருத்துவ சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றனர்

முழு கட்டுரையைப் படிக்க →