கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளைப் புதுச்சேரி முதல்வருக்கு வாட்ஸ்-ஆப் மூலம் தெரிவிக்குமாறு முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தவிர்க்க இயலாத சூழ்நிலையில் பொதுமக்கள் உடல்நலன் கருதி, தங்களின் குறைகள், கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவிக்க நேரில் வராமல், 9345375069 என்கிற செல்லிடபேசி எண்ணிற்கு வாட்ஸ்-ஆப் மூலமாகத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் இந்த ஏற்பாடு வரும் 31ம் தேதி வரையில் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.