முகப்பு
தமிழ்நாடு

புதுவை பேரவை மார்ச் 30-இல் கூடுகிறது

புதுவை சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் மார்ச் 30-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது.

தமிழ்நாடு

புதுவை பேரவை மார்ச் 30-இல் கூடுகிறது

புதுவை சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் மார்ச் 30-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:17 PM
பகிர்:

புதுவை சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் மார்ச் 30-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது.

நாடு முழுவதும் கரோனா தொற்றறு பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுவையிலும் ஏப்.15-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுவையில் கரோனா பாதிப்பால் இதுவரை உயிரழப்பு இல்லை என்றாலும், கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

கரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க ஏற்கெனவே அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டது. இருப்பினும் பேரவையை கூட்டி விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், பேரவையை மார்ச் 30-ஆம் தேதி கூட்ட பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பேரவை செயலர் வின்சென்ட் ராயர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.

கடைசியாக பிப்.12-ஆம் தேதி புதுவைப் பேரவை கூட்டப்பட்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →