தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 74 ஆக உயர்வு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 74 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

DIN

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

இந்தத் தகவலை தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 67 ஆக இருந்த எண்ணிக்கை இன்று 7 உயர்ந்து 74 ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி விழுப்புரத்தை சேர்ந்த 3 பேருக்கும், மதுரையை சேர்ந்த 2 பேருக்கும், திருவண்ணாமலை, சென்னையில் தலா ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது. விழுப்புரத்தில் பாதிக்கப்பட்ட 3 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.

தொற்று உறுதி செய்யபட்ட 7 பேரில் 4 பேர் தில்லி சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT