தமிழ்நாடு

கரோனா சிகிச்சைக்கு திருச்சி கலைஞர் அறிவாலயம்: ஆட்சியரிடம் அனுமதி கடிதம் அளித்த கே.என்.நேரு

திருச்சி கலைஞர் அறிவாலயத்தை கரோனோ சிகிச்சைக்கான தனிமைப்படுத்துல் முகாமுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் திமுக சார்பில் அனுமதி கடிதம் அளிக்கபட்டுள்ளது.

DIN

திருச்சி: திருச்சி கலைஞர் அறிவாலயத்தை கரோனோ சிகிச்சைக்கான தனிமைப்படுத்துல் முகாமுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் திமுக சார்பில் அனுமதி கடிதம் அளிக்கபட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் கலைஞர் அரங்கை கரோனோ சிகிச்சைக்கா மையமாக பயன்படுத்திக் கொள்ள திமுக சார்பில் அனுமதி வழங்கி மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சிக்கு கடிதம் அளித்துள்ளார். 

இதேபோல, திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகேயுள்ள கலைஞர் அறிவாலயத்தையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திருச்சி மேற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், திமுக-வின் முதன்மைச் செயலருமான கே.என். நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து செவ்வாய்க்கிழமை அனுமதி கடிதம் அளித்தார். 

கலைஞர் அறிவாலயத்தை கரோனோ சிகிச்சைக்காக தனிமைப்படுத்துதல் முகாமுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என கடிதத்தில் தெரிவித்துள்ளார். கே.என். நேரு சார்பில், ஏற்கெனவே கரோனோ நிவாரண உதவித் தொகையாக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் நன்கொடை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT