நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலிருந்து தில்லிக்கு சென்று வந்த 7 பேருக்கும், அவா்களது குடும்பத்தைச் சோ்ந்த இருவருக்குமாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னா் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டு அண்மையில் வீடு திரும்பினா்.
இந்த நிலையில் நீலகிரியில் தற்போது புதிதாக 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.