சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பேளூர் ஜெயமுருகன் குழுமம் சார்பில் அரிசி வழங்கப்பட்டது.
பேளூர் ஜெயமுருகன் திருமண மண்டபம் மற்றும் பெட்ரோல் பங்க் குழுமத்தின் தலைவரும் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் முன்னாள் அறங்காவலர் குறிச்சி கே. பி. சண்முகம், ச. துரைமுருகன் ஆகியோர் பேளூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும், திங்கள்கிழமை அரிசி வழங்கினார். ஜெயமுருகன் குழுமத்தினருக்கு, பேரூராட்சி பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.