முகப்பு
தமிழ்நாடு

தஞ்சாவூர் உள்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
தஞ்சாவூர் உள்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பகிர்:

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சனிக்கிழமை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், 

தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 48 (07.11.2020 மற்றும் 08.11.2020) மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். 

அடுத்த 72 (09.11.2020) மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது மதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடம். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்

இடையப்பட்டி (மதுரை) 7 செ.மீ மழையும், காரியாபட்டி (விருதுநகர்) 6 செ.மீ மழையும். விரகனுர் அணை (மதுரை), மானாமதுரை (சிவகங்களை), பேரையூர் (மதுரை) தலா 5 செ.மீ மழையும், திருபுவனம், தல்லாகுளம், பிளவக்கல், காயல்பட்டினம், கடலூர், திருச்செந்தூர், சோழவந்தான் தலா 4 செ.மீ மழையும் பெய்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →