உத்தமபாளையம் ஆதார் மையத்தில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக குவிந்த பொதுமக்கள். 
தமிழ்நாடு

உத்தமபாளையம்: ஆதார் மையத்தில் குவிந்த மக்களால் தொற்று பரவும் அபாயம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆதார் மையத்தில் அதிகரித்து வரும் மக்கள் கூட்டத்தால் கரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆதார் மையத்தில் அதிகரித்து வரும் மக்கள் கூட்டத்தால் கரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உத்தமபாளையம் வட்டாரத்தில் தே. மீனாட்சிபுரம், தேவாரம் பண்ணைபுரம், கோம்பை என 30-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. 

இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பம் செய்தல், பெயர் திருத்தம் போன்ற பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

தற்போது  கரோனா நோய் தொற்று பரவும் சூழ்நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி ஆதார் மையத்தில் குவிந்து வருவது நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக  புகார் எழுந்துள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் உத்தமபாளையம் ஆதார் மையத்தில் குவிந்து வரும் பொதுமக்களை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

SCROLL FOR NEXT