தமிழ்நாடு

அதிமுகவில் 3 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

DIN

அதிமுகவில் திருப்பூர், புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், 
திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன், 
திருப்பூர் புறநகர் மேற்குமாவட்ட செயலாளராக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்,
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.பி. சி.மகேந்திரன்,
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளராக பி.கே. வைரமுத்து,
தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக எம்.பி., வைத்திலிங்கம்,
விருநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக ரவிச்சந்திரன்,
விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்ணச்சநல்லூரில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

பெருங்களூா் உருமநாதா் கோயில் தோ்த் திருவிழா

எசனை காட்டுமாரியம்மன் கோயில் தேரோட்டம்

புகழூா் நகராட்சியில் ரூ.1.58 கோடி வரி வசூல்

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு தபால் வாக்குகள் பிரிப்பு: பதிவு செய்யப்பட்டது- 8,827; பதிவு செய்யப்படாதது-21,890

SCROLL FOR NEXT