முகப்பு
புதுச்சேரி பள்ளிகளில் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம்
தமிழ்நாடு

புதுச்சேரி பள்ளிகளில் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம்

புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்கத்தின் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டித் திட்டம் வியாழக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு

புதுச்சேரி பள்ளிகளில் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம்

புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்கத்தின் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டித் திட்டம் வியாழக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
புதுச்சேரி பள்ளிகளில் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம்
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்கத்தின் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டித் திட்டம் வியாழக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, ''புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு தற்போது காலையில் பால் தரப்படுகிறது. இது விரிவுபடுத்தப்பட்டு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் சிற்றுண்டித் திட்டம் அமல்படுத்தப்படும்.

இதன்படி சிற்றுண்டியில் இட்லி, பொங்கல், கிச்சடி வழங்கப்படும். பால், பிஸ்கெட் திட்டம் ராஜீவ் பெயரிலும், காலை சிற்றுண்டித் திட்டம் கருணாநிதி பெயரிலும் இருக்கும்'' என்று அறிவித்தார்.

அதன்படி, சிற்றுண்டித் திட்டத்தின் கீழ் காலை உணவாக கேசரி, இட்லி, பொங்கல், சட்னி- சாம்பார் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வியாழக்கிழமை (நவ.12) காலை புதுச்சேரி காராமனிக்குப்பம் ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான 
ஆர்.எஸ். பாரதி தொடங்கி வைத்தார். விழாவுக்கு புதுச்சேரி முதல்வர் வே. நாராயணசாமி தலைமை வகித்தார். 

இத்திட்டத்தின் கீழ், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி மாணவர்களுக்கு இட்லி, பொங்கல், கிச்சடி, சாம்பார் சட்னி வழங்கப்படுகிறது. 

மாகி பள்ளி மாணவர்களுக்கு உப்புமா, புட்டு, கடலை, உடைத்த கோதுமை உப்புமா, சட்னி வழங்கப்படுகிறது.

ஏனாம் பள்ளி மாணவர்களுக்கு உப்புமா- சட்னி, தக்காளி சாதம்-சட்னி, கிச்சடி-சட்னி, கோதுமை உப்புமா - சட்னி வழங்கப்படுகிறது. 

இந்தத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள மொத்தம் 81,000 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர் என்றும், இந்த திட்டத்திற்காக புதுச்சேரி அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதுமட்டுமின்றி கூடுதலாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →