தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில்,
குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்
காயல்பட்டினம் (தூத்துக்குடி) 21 செ.மீ மழையும், பரமக்குடி (ராமநாதபுரம் 13 செ.மீ மழையும், பாபநாசம் 12 செ.மீ மழையும், தேவகோட்டை, கொட்டாரம் தலா 10 செ.மீ மழையும், அரிமளம், சிவகாசி, காரைக்குடி தலா 9 செ.மீ மழையும், நன்னிலம், சிவகிரி, அம்பாசமுத்திரம், கூடலூர், திருச்செந்தூர் தலா 8 செ.மீ மழையும், பேரையூர், தாராபுரம், அய்யம்பேட்டை, மணிமுத்தாறு தலா 7 செ.மீ மழையும் பெய்துள்ளது.