முதல்வரின் கரோனா ஆய்வுக்கூட்டம் ஒத்திவைப்பு
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி மேற்கொள்ளவிருந்த கரோனா ஆய்வுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி மேற்கொள்ளவிருந்த கரோனா ஆய்வுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 27.11.2020 அன்று பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் கரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறவிருந்தது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக 27.11.2020 அன்று நடைபெறவிருந்த ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.