முகப்பு
தமிழ்நாடு

நிவர் புயல்: கடலூரில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் காரணமாக கடலூரில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
நிவர் புயல்: கடலூரில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
பகிர்:


 
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் காரணமாக கடலூரில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்த நிலையில், இன்று காலை புயல் எச்சரிக்கை கூண்டு நேரடியாக 7-ஆம் எண்ணாக உயர்த்தப்பட்டது. இதனால் துறைமுகம் அருகில் கடந்து செல்லும் புயலால், துறைமுகப் பகுதி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்பதை குறிக்கிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இது, செவ்வாய்க்கிழமை காலை புயலாக வலுவடைந்தது. 

மேலும், இந்தப் புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே நவம்பா் 25-ஆம் தேதி பிற்பகலில் கரையை கடக்கவுள்ளது. அப்போது, மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →