தமிழ்நாடு

டிச. 4 ஆம் தேதி சிவகங்கை செல்கிறார் முதல்வர் பழனிசாமி

DIN

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் முக்கிய வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். 

இந்நிலையில் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி சிவகங்கை செல்கிறார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

இதனிடையே மதுரையில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டுவரும் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டவிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு!

தோல்விக்கு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறிய காரணம் என்ன தெரியுமா?

பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: பாஜக மாவட்டத் தலைவர் கைது

ஆப்கானிஸ்தானில் வெள்ளம்: 50 பேர் பலி!

அரவிந்த் கேஜரிவால் இன்று மாலை பிரசாரத்தை தொடங்குகிறார்

SCROLL FOR NEXT